<no title>சில புதிய வசதிகளை ஏற்படுத்த, போலீஸ் அதிகாரிகள் முடிவுசெய்துள்ளனர்

இதனால், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களை கண்காணிக்க, தமிழக காவல் துறை சார்பில், 'COVID- 19 Quarantine monitor' என்ற, 'மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட்டது.அதிகாரிகள் முடிவு இதில், சில புதிய வசதிகளை ஏற்படுத்த, போலீஸ் அதிகாரிகள் முடிவுசெய்துள்ளனர்.

இதுகுறித்து, மாநில சட்டம் - ஒழுங்கு, கூடுதல் டி.ஜி.பி., ஜெயந்த் முரளி கூறியதாவது: இந்த மொபைல் ஆப்பில், ஏற்கனவே, கொரோனா அறிகுறிஉள்ளவர்களின் பெயர், பாலினம், இருப்பிட முகவரி, தொடர்பு எண்கள் உள்ளீடு செய்யப்படும்.அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினால், அவர்களின் முகவரி, மொபைல் போன் எண்ணுடன், போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்,பி.,க்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறைகளுக்கு தகவல் சென்று விடும்; அவர்கள், அந்த நபரை மீட்டு விடுவர்.மேலும், இந்த செயலி வாயிலாக, 'டெலி மெடிசன்' எனும், மருத்துவ ஆலோசனை அளிக்கும் வசதியும் செய்ய உள்ளோம்.